சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

முதல் ஆயிரம்   குலசேகராழ்வார்  
பெருமாள் திருமொழி  

Songs from 647.0 to 751.0   ( )
Pages:    Previous   1  2  3  4    5  6  Next
என்னை வருக எனக் குறித்திட்டு
      இனமலர் முல்லையின் பந்தர்-நீழல்
மன்னி அவளைப் புணரப் புக்கு
      மற்று என்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன்னிற ஆடையைக் கையிற் தாங்கிப்
      பொய்-அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள்
      வருதியேல் என் சினம் தீர்வன் நானே



[705.0]
Back to Top
மங்கல நல் வனமாலை மார்வில்
      இலங்க மயில்-தழைப் பீலி சூடி
பொங்கு இள ஆடை அரையிற் சாத்தி
      பூங்கொத்துக் காதிற் புணரப் பெய்து
கொங்கு நறுங் குழலார்களோடு
      குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத
      உன் குழலின் இசை போதராதே?



[706.0]
அல்லி மலர்த் திருமங்கை கேள்வன்
      தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லிப் பொழுதினில் ஏமத்து ஊடி
      எள்கி உரைத்த உரையதனைக்
கொல்லி நகர்க்கு இறை கூடற்கோமான்
      குலசேகரன் இன்னிசையில் மேவிச்
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
      சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே.



[707.0]
ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
      அம்புயத் தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ
      வேழப் போதகம் அன்னவன் தாலோ
ஏல வார் குழல் என்மகன் தாலோ
      என்று என்று உன்னை என் வாயிடை நிறையத்
தால் ஒலித்திடும் திருவினை இல்லாத்
      தாயரிற் கடை ஆயின தாயே



[708.0]
வடிக் கொள் அஞ்சனம் எழுது செம் மலர்க்கண்
      மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கிச் சேவடி மலர்ச் சிறு கருந்தாள்
      பொலியும் நீர்-முகிற் குழவியே போல
அடக்கியாரச் செஞ் சிறு விரல் அனைத்தும்
      அங்கையோடு அணைந்து ஆணையிற் கிடந்த
கிடக்கை கண்டிடப் பெற்றிலன் அந்தோ
      கேசவா கெடுவேன் கெடுவேனே



[709.0]
முந்தை நன்முறை அன்பு உடை மகளிர்
      முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி
எந்தையே என்தன் குலப் பெருஞ் சுடரே
      எழு முகிற் கணத்து எழில் கவர் ஏறே
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ்
      விரலினும் கடைக்கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா
      நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே.



[710.0]
Back to Top
களி நிலா எழில் மதிபுரை முகமும்
      கண்ணனே திண்கை மார்வும் திண்தோளும்
தளிர் மலர்க் கருங் குழற் பிறையதுவும்
      தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த
இளமை-இன்பத்தை இன்று என்தன் கண்ணால்
      பருகுவேற்கு இவள் தாயென நினைந்த
அளவில் பிள்ளைமை-இன்பத்தை இழந்த
      பாவியேன் எனது ஆவி நில்லாதே



[711.0]
மருவும் நின் திருநெற்றியிற் சுட்டி
      அசைதர மணிவாயிடை முத்தம்
தருதலும் உன்தன் தாதையைப் போலும்
      வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர
விரலைச் செஞ் சிறுவாயிடைச் சேர்த்து
      வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் உரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
      தெய்வ நங்கை யசோதை பெற்றாளே



[712.0]
தண் அந் தாமரைக் கண்ணனே கண்ணா
      தவழ்ந்து தளர்ந்ததோர் நடையால்
மண்ணிற் செம்பொடி ஆடி வந்து என்தன்
      மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ
வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும்
      வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன்
      என்னை என் செய்யப் பெற்றது எம் மோயே



[713.0]
குழகனே என்தன் கோமளப் பிள்ளாய்
      கோவிந்தா என் குடங்கையில் மன்னி
ஒழுகு பேர் எழில் இளஞ்சிறு தளிர்போல்
      ஒரு கையால் ஒரு முலை-முகம் நெருடா
மழலை மென்னகை இடையிடை அருளா
      வாயிலே முலை இருக்க என் முகத்தே
எழில் கொள் நின் திருக் கண்ணினை நோக்கந்
      தன்னையும் இழந்தேன் இழந்தேனே!



[714.0]
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
      முகிழ் இளஞ் சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
      நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
      அணிகொள் செஞ் சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட அசோதை
      தொல்லை-இன்பத்து இறுதி கண்டாளே



[715.0]
Back to Top
குன்றினால் குடை கவித்ததும் கோலக்
      குரவை கோத்ததுவும் குடமாட்டும்
கன்றினால் விளவு எறிந்ததும் காலால்
      காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்
      அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள்குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன்
      காணுமாறு இனி உண்டெனில் அருளே.



[716.0]
வஞ்சம் மேவிய நெஞ்சு உடைப் பேய்ச்சி
      வரண்டு நார் நரம்பு எழக் கரிந்து உக்க
நஞ்சம் ஆர்தரு சுழிமுலை அந்தோ
      சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய்
      கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து
தஞ்ச மேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன்
      தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே



[717.0]
மல்லை மா நகர்க்கு இறையவன்தன்னை
      வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
      தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மால் அடி முடிமேல்
      கோலமாம் குலசேகரன் சொன்ன
நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள்
      நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே



[718.0]
மன்னு புகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ



[719.0]
புண்டரிக மலரதன்மேல் புவனி எல்லாம் படைத்தவனே
திண் திறலாள் தாடகைதன் உரம் உருவச் சிலை வளைத்தாய்
கண்டவர்தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கருமணியே
எண் திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ



[720.0]
Back to Top
கொங்கு மலி கருங்குழலாள் கௌசலைதன் குல மதலாய்
தங்கு பெரும் புகழ்ச்சனகன் திரு மருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்து என் கருமணியே
எங்கள் குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோ



[721.0]
தாமரை மேல் அயனவனைப் படைத்தவனே தயரதன்தன்
மா மதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசைபாடும் கணபுரத்து என் கருமணியே
ஏமருவும் சிலை வலவா இராகவனே தாலேலோ



[722.0]
பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே
சீர் ஆளும் வரை மார்பா திருக் கண்ணபுரத்து அரசே
தார் ஆரும் நீண் முடி என் தாசரதீ தாலேலோ



[723.0]
சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே
கற்றவர்கள்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா தாலேலோ



[724.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song